பாஹ்ய மதம் 11ம், குதிருஷ்டி மதம் 6 மாக , 17 மதங்களும் தத்வ ஹித புருஷார்த்தங்களை விவிதமாக விப்பிரதிபத்தி பண்ணின படியை இனிச் சொல்லுவோம்.:
லோகாயதிகன் :
ஆத்மா - தேகமே
பரமாத்மா - இல்லை
கர்மம் - இல்லை.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திகர்கள் இவர்கள்.
ஸ்வர்கம் - உலக இன்பம்.
நரகம் - சத்ரு சைன்யம் , பசி, பிணி, வியாதி etc
இதற்கு மேற்பட அவ்வருகில்லை .
தத்வம் - ஒன்றே. தேக அதிரிக்த எதுவும் இல்லை.
ஜகத் - பரமாணு சங்காதம்
சம்ஸாரம் - பூத சதுஷ்டய கூட்டரவு
சாதனம் - பூத சதுஷ்டய பிரிவு
முக்தி - சைதன்ய நாசம்.
வெற்றிலை+பாக்கு+சுண்ணாம்பு சேர
பச்சை+பழுப்பு+வெளுப்பு நிறம் சேர
உதட்டில் சிகப்பு நிறம் உண்டாவதுபோல
பூத சதுஷ்டய கூட்டரவில் சைதந்யம் உண்டாகும்.
மரணத்தில் அந்த சைதன்யம் நசிகை மோக்ஷம்.
ஞானான் மோக்ஷம் என்று சாஸ்திரம் செல்லுகையில், ஞானம் நசிகை மோக்ஷம் என்பது இவர்கள் கொள்கை.
ஜைனன் :
ஸப்த பங்கி வாதிகள் -
1. ஸ்யாத் அஸ்தி - உள்ளதாக இருக்கலாம்
2. ஸ்யான் நாஸ்தி - இல்லாததாக இருக்கலாம் .
3. ஸ்யாத் அஸ்திச நாஸ்திச - உளதாகவும் இல்லாததாகவும் இருக்கலாம்.
4. ஸ்யாத் அ வக்தவ்யம்ச - சொல்லும் வகை இல்லது இருக்கலாம்.
5. 1 & 4 - ஸ்யாத் அஸ்திச அ வக்தவ்யம் ச
6. 2 & 4 - ஸ்யான் நாஸ்திச அவக்தவ்யம் ச
7. 3 & 4 - ஸ்யாத் அஸ்திச நாஸ்திச அ வக்தவ்யம்ச
இவை
சத்யாஸத்யம் = அஸ்தி x நாஸ்தி x 7
நித்யாநித்யம் = அழிவது x அழியாதது x 7
பின்னாபின்னம் = ஒன்று x பல x 7
என்பதாக 21 விதமான வாதம் உண்டு .
ஆத்மா - தேக வியதிரிக்த ஆத்மா உண்டு. ஆனைக்கு ஆனை அளவும், பூனைக்கு பூனை அளவுமாக தேக பரிமாணமாய், விபுவாய் இருக்கும்
பரமாத்மா - இல்லை.
கர்மம் - உண்டு.
தத்வம் - ஆறு. அவை தர்மம், அதர்மம், ஜீவன், புத்காலம், ஆகாசம், காலம்.
ஜகத் - சத்யாசத்தியமாய், நித்யாநித்யமாய், பின்னாபின்னமாய் ஒருபடி படலாகா ஒன்று.
சம்ஸாரம் - தேகம் கர்மாதீனம். அநாதி.
சாதனம் - (மயிற்பீலியும் கையுமாய்) அஹிம்சை , அமணத்வம் (திகம்பரர் = திக்கே ஆடை) , (வாய்க்கு துணியைக் கட்டி) மௌனியாகை , மழித்த தலை, பாணிபத்ர போஜனம், இந்திரிய நிக்ரகம் இத்யாதி நியமமங்கள்.
முக்தி - சம்ஸார நிவிர்த்தி + ஊர்த்வ கதியை பிராபிக்கை.
நிரசனம் :
வஸ்துக்களில் இரண்டு விருத்த தர்மங்கள் ஒரே காலத்தில் இருக்க வழியில்லை. எனவே அது சம்பவம் என்று சொல்லுகிற ஜைன மதம் தள்ளுபடி.
தவிற யானைக்கு யானை அளவு ஆத்மா என்றால் , அடுத்த பிறவியில் பூனையாகவோ, நாயாகவோ பிறக்க நேரிட்டால், அந்த ஆத்மா எடுத்துக்க கொண்ட சரீரத்துக்குள் அடங்காமையாகிற - அகார்ஷியமாகிற - தோஷம் வரும். இல்லை சரீரம் அளவுக்கு கூடுதல், குறைதல் என்கிற விகாரத்தை ஆத்மாவுக்கு ஒத்துக்க கொள்ள வேண்டும்.
ஆத்மா விகாரமற்றதாய், ஸூக்ஷ்ம ரூபியாய், தர்ம பூத ஞானம் கொண்டே அதிஷ்டானம் பண்ணி இருக்கிற சரீரம் முழுதும் வியாபிப்பவன் என்று சாஸ்திரம் சொல்லுகிறபடியால், அது கொண்டும் ஜைனமதம் தள்ளாத தக்கது.
பெளத்தன் :
சூன்யத்தாலே சூன்யத்தை பிராபிக்கை சூன்யமான மோக்ஷம். - பொதுக் கொள்கை.
(பிரமேயம்) ஜகத்து - வாயு பரமாணு (ஸ்பர்சம்) + அக்நி பரமாணு (ரூபம்) +அப்பு பரமாணு
(ரஸம் ) + பிருதிவி (கந்தம்) என்கிற பூத சதுஷ்டயங்களின் கூட்டரவு. பிரத்யக்ஷ சித்தம்.
(பிரமாணம்) ஞானம் - க்ஷணிகம் (Flux) - மாறிக் கொண்டே இருப்பது.
(பிரமாதா) ஆத்மா - பிராமண பின்னமான ஆத்மா இல்லை. அதாவது. ஞானமே ஆத்மா. அவன் ஞான குணகன் அன்று.
வைபாஷிகன் -
ஆத்மா - லோக விவகார ரூப ஞானமே ஆத்மா. அதுவும், பிரவாகதயா க்ஷணிகம்.
பரமாத்மா - இல்லை.
கர்மம் - இல்லை.
தத்வம் - 35 . ஆனால் அவைகள் ஞானம் ; ஞேயம் என்ற இரண்டுக்குள் அடக்கலாம்.
ஜகத் - பரமாணு சங்காதம். க்ஷணிகம். பிரயக்ஷ சித்தம்.
சம்ஸாரம் - ஜகத் ஸ்திரம் என்கிற நினைவு.
சாதனம் - ஜகத் க்ஷணிகம் என்கிற அறிவு.
முக்தி - சூன்யம்.
நிரஸனம் :
உபய ஹேது கேது.
1. கூட்டரவு ஏற்பட்ட பரமாணுக்கள் இடையில்
நெருக்கம்
ஈர்ப்பு
கலப்பு
என்பவை அடுத்தடுத்து நிகழ வேண்டும். அதற்கு அவைகளின் ஸ்திர தன்மை அவசியம். ஒரு க்ஷணத்தில் இருந்து அடுத்த க்ஷணத்தில் அழியாக் கூடிய வஸ்துக்கள் மத்தியில், கூட்டரவு ஏற்பட்ட வழியில்லை.
2. இல்லாதது ஜகத்
ஜல பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி ஜல தத்வம்.
வாயு பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி வாயு தத்வம்
நிலத்துக்கான பரமாணு ஒன்றொன்றாக் கூடி பிருதிவி தத்வம்
நீருக்கான பரமாணுக்கள் ஒன்றொன்றாகக் கூடி அப்புவும்
இப்படி உருவான பூத சதுஷ்டயங்கள், உருவான அடுத்த க்ஷணம் நிலைக்காவிடில் கூட்டரவு சாத்தியமில்லை.
இரண்டிலும் அஸ்திரமே பேசப்படுவதால் உபய ஹேது கேது பிரத்யக்ஷ சித்த ஜகத்தோடு ஒவ்வாது.
ஸௌத்ராந்திகன் - சித்தாந்தம் அதுவே.
ஜகத்து - பிரத்யக்ஷ சித்தம் என்றால் சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது. எனவே ஜகத் ஆனுமானிக சித்தம் என்றான். அது ஒன்றே வேறுபாடு.
ஞானம் - க்ஷணிகம்.
ஆத்மா - ஞான அதிரிக்த ஆத்மா இல்லை. அறிவும் (கட த்வ ஞானம்) அறியப்படும் பொருளும் (கடமும்), இரண்டும் ஒன்றாகவே கிரகிக்கப் படுவதால் , ஞானம் உண்டு , ஞேயம் இல்லை என்றான்.
உ.ம். கருப்பான, வாயும் வயிறுமான குடத்தை பார்த்த கூடலே , கடமும் - கடத்வ ஞானமும் இரண்டும் ஒன்றாக புத்தியுள் கிரகிக்கப் படுவதால் ஞானம் ஒன்றே போதும். ஞேயமான ஜகத் பிரமம் அதாவது பொய் என்றான் .
நிரஸனம் :
3. உருவானது அழியுமானால், ஜகத் துவம்சம் -> சூன்யம்தான் சித்திக்கும் . அது அனுமான சித்த மாகாது என்கிற ஆக்ஷேபம் எழ வஸ்து அழிந்தாலும் அதன் ஆகாரம் புத்திஸ்த்த மானபோது அனுமான சாத்தியம் என்கிற சமாதானம் கூறப்பட்டது. அது நிற்க.
4. க்ஷணிக வாதத்தால் முயற்சியும் - பல வியாப்தியும் ஒரு வியக்தியில் இல்லாது, உதாசீனர்கள் பலத்தை அனுபவிப்பதாக முடியும். இது கூடாதே .
யோகாசாரன் - இவர்களுக்கும் ஸித்தாந்தம் அதுவே.
க்ஞாத்ரு , ஞேயங்கள் - பிரமம். பிரமாதா (ஆத்மா), பிரமேயம் (ஜகத்து) இரண்டும் -> பொய். ஞானமே உண்டு. அதுவும் க்ஷணிகம்.
ஆத்மா - ஞானம்
பரமாத்மா - இல்லை.
கர்மம் - இல்லை.
தத்வம் - ஞானம் ஒன்றே. க்ஷணிகம்.
ஜகத் - பிரமம்.
சம்ஸாரம் - ஜகத் பிரத்யக்ஷம் (அ ) அனுமான சித்தம் என்றிருக்கை.
சாதனம் - க்ஷணிக ஞானம்.
முக்தி - சூன்யம்.
மாத்யமிகன் - பக்ஷமும் அதுவே.
பிரமாணம், பிரமேயம், பிரமாதா மூன்றை - உண்டு என்று அறிக்கை பிரமம் - மூன்றும் பொய் என்கிறான்.
மோக்ஷம் - ஞானத்தால் பரமபதத்தைப் பிராபிக்கை மோக்ஷம் என்கிற வைதிக மதத்துக்கு எதிராக சூன்யத்தாலே சூன்யம் என்று அறிக்கை மோக்ஷம் என்பதான ஸர்வ சூன்ய வாதம் இவனுடையது.
நிரஸனம் :
அபாவோ: ந, உபலத்தே:
ந பாவ: அநுபலப்பதே:
அறிபவன், அறியப்படும் பொருள் இரண்டையும் பற்றாமல் அறிவு ஏற்படாது. எனவே ஜகத், ஞானம் இரண்டுமே உண்டு.
அனுப்பபத்தேஸ் ச
அஸ்தி சப்தத்தாலோ
நாஸ்தி சப்தத்தாலோ
சூன்யத்தை ஸ்தாபிக்க முடியாது.
ஆக்ஷேபம் :
கடம் நாஸ்தி என்றால் அதன் பொருள் என்ன?
கடம் இங்கு இல்லை (அ )
கடம் இப்போது இல்லை (அ )
குட வடிவில் வஸ்து இல்லை என்றுதான் தேறும்
குடம் என்கிற வஸ்துவே இல்லை என்று பொருள் படாது,
இங்கு இல்லையேனும் வேறு இடத்தில் உண்டு.
இப்போது இல்லையேனும் முன்பு இருந்திருக்க வழி யுண்டு.
குடமாக இலையெனும், சில்லாக, மடக்காக இருக்க வகை யுண்டு.
ந+அஸ்தி யில் அஸ்தி தொக்கி உள்ளதால்.
சமாதானம் :
மண்ணில் இருந்து குடம் உருவாகும் போது
மண் என்கிற ஸ்திதி போய் குடம் என்கிற ஸ்திதி கிட்டுகிறது.
மண்ணின் அபாவம் குடத்தின் உற்பத்திக்கு காரணமாகிறது.
எனவே அபாவம் = சூன்யம் குடத்திற்கு காரணமாகிறதே? என்றான்.
நிரஸனம்:
மண்ணின் அபாவம் குடம்
நூலின் அபாவம் வேட்டி
கட்டிப் பொன்னின் அபாவம் பணிப் பொன்.
அபாவம்தான் வஸ்துவின் காரணம் என்றால்
ஒன்றின் அபாவம் இன்னொன்றின் காரியமா கலாமே?
மண்ணில் இருந்து வேட்டியோ , நகையோ (அ )
நூலில் இருந்து குடமோ , நகையோ (அ )
கட்டிப் பொன்னிலிருந்து வேட்டியோ , மண் குடமோ வருமோ? இல்லையே .
ஆக, பாவமான மண்ணில் இருந்துதான் பாவமான குடம் பிறக்கிறதே ஒழிய , அபாவத்தில் இருந்து அன்று. மண் , குடம் இரண்டுக்கும் வஸ்து பேதம் இல்லை. ஸ்திதி பேதமே உள்ளது. உள்ளத்தில் இருந்து உள்ளது பிறக்கும் ஒழிய , இல்லத்தில் இருந்து உள்ளது பிறக்காது. இதுவே ஸத் காரண வாதம்.
அடுத்து, சூன்யத்தை சாதிக்க பிரமாணம் வேண்டுமே ?
ஸத்தான பிரமாணத்தால் சூன்யத்தை ஸ்தாபித்தால், ஸர்வ சூன்ய வாதம் நிற்காது.
மாறாக பொய்யைக் - அ-ஸத்தானதைக் - கொண்டு சூன்யம்தான் உண்மை என்று சாதிக்கவும் முடியாது, எப்படிப் பார்த்தாலும் சூன்ய வாதம் பழுதே.
ஆத்மா - இல்லை
பரமாத்மா - இல்லை
கர்மம் - இல்லை
தத்வம் - இல்லை
ஜகத் - பிரமம்
சம்ஸாரம் - தத்துவங்கள் உண்டு என்கிற பிரமம்
சாதனம் - சூன்ய புத்தி
முக்தி - சூன்யம்
நையாயிக (தார்கிக) பக்ஷம் - பிரவர்த்தகர் -> அக்ஷபாதர்.
வைசேஷிக பக்ஷம் - பிரவர்தகர் -> கணாதர் .
ஈஸ்வரன்.-> ஆனுமானிக நிமித்த காரணம்
ஜகத்துக்கு -> உபாதான காரணம் -> பரமாணுக்கள் சமவாயி காரணம். வேட்டிக்கு, நூல் உண்டையும் பாவும் பின்னிப் பிணைகை காரணம் அது போலே
குணம் - குணி
அவயவம் - அவயவி
கிரியா - கிரியாவான்
இரண்டின் சம்பந்தம், இரண்டில் ஒன்று நசியும் வரை நீடிப்பது போலே .
அசமவாயி காரணம் -> வேட்டியின் வண்ணத்துக்கு நூலின் வண்ணம் காரணமாவதில்லை.
சம்ஸாரம் -> அநாதி.
மோக்ஷம் -> சுக, துக்க, ஞானம் நாசிகை - பாஷாண கல்பம் -> கல்லு போலே , கட்டை போலே ஆகை.
உபாயம் -> பகவத் உபாசனம்
நிரஸனம் :
வேட்டி நெய்யும் போது நூலின் 4 பக்கங்களில் , இரண்டு பக்கங்கள் இதர இழையோடு சம்பந்தப் பட்டு, மற்ற இருபக்கங்கள் ஆடை உடுத்தலாம்படி , அவயவங்களோடு கூடி இருக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால், பரமாணுக்கள் அவையவம் அற்றவை. அவைகள் சேருவது எங்கனே?
பரமாணு, துவயணுகம் , த்ரியணுகம் என்று சேருவதற்கு காரணம் யார்? அதற்கு அதிருஷ்டம் காரணம் என்றால் அது வஸ்துவில் உள்ளதா? ஆத்மாவில் உள்ளதா? வஸ்துவில் உள்ளது என்றால் , அவைகளுடைய சேர்கையால் ஸ்ருஷ்டி அநாதிகாலமாய் நடக்க வேணும். புதிதாக ஏற்பட்ட வேண்டிய ஒன்று இல்லை. அதிருஷ்டம் ஆத்மாவில் உள்ளது என்றால், அது எப்படி பரமாணுவை இணைக்கப் போகும்? - என்று இப்படி பலபல ஒவ்வாமை வந்து சேரும்.
ஆத்மா - உண்டு.
பரமாத்மா - அனுமானிக நிமித்த காரணம் ஈஸ்வரன்.
கர்மம் - உண்டு
தத்வம் - 16
ஜகத் - பரமாணு சேர்கை
சம்ஸாரம் - அநாதி
சாதனம் - பகவத் உபாசனம்
முக்தி - சுக, துக்கம் போய் , ஞானமும் நசிகை பாஷாண கல்பம்
பாசுபதர் :
காளா முகர்கள்
பாசுபதர்கள்
சைவர்கள்
காபாலிக்கர்கள் (கபாலத்தை மாலையாக அணிந்திருப்பவர்கள்)
என்று நான்கு பிரிவு.
ஜகத்துக்கு -> பரமாணுக்கள் உபாதான காரணம். சைவ ஆகம ஸித்த ஈஸ்வரன் நிமித்த காரணம்.
சம்ஸாரம் -> அநாதி.
மோக்ஷம் -> ஆகம விதிப்படி => .
6 முத்திரைகளை அணிதல் அதாவது கழுத்து, கை, காது சிகை ஆகிய இடங்களில் ருத்ராக்ஷ மாலையைத் தரித்தல், பஸ்ம தாரணம் , (சைவாகமத்தில் பிராம்மணனுக்கே மோக்ஷம் என்று இருக்கிற படியால்) யக்ஞோபவீதம் தரிப்பது இவை 6ம் -> ஷட் முத்ரிகா எனப்படும். இப்படி இருப்பவர்கள் பிராம்மண்யத்தை அடைந்து விடுகிறார்கள். இவர்கள் சன்யாசிகளாகவும் ஆகி விடுகிறார்கள்.
பெண் குறியிலே
காடி சால் மூலையில் (கள் பானை = ஸுரா கும்பத்தில் ) ஸ்தாபிக்கப் பட்டு இருக்கிற லிங்கத்தை
பஸ்ம தாரணர்களாக
பகாசனத்தில் அமர்ந்து
பிரணவத்தை தியானிப்பவர்களே
ஆகம விதிப்படி கர்மங்களை நன்றாக அனுஷ்டித்தவர்கள் ஆகிறார்கள். அவர்களே பசுபதி ஸாரூப்யம் பெற்று மோக்ஷத்தை அடைகின்றனர்.
நிரஸனம் :
பரமபதமாகிற வைகுந்தத்தை அடைந்து, நாராயண ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம்
என்று சாஸ்திரம் => ஸுபாலோபநிஷத், நாராயணா அநுவாகம் , புருஷ ஸூக்தம் இவைகளில் சொல்லி இருக்க -
பசுபதி ஸாரூப்யம் பெறுதல் மோக்ஷம் என்கை வேதத்தோடு அசமஞ்சஸம் .
சிவ: சம்பு: , ருத்ர: , ஹிரண்யகர்ப: என்கிற திருநாமங்கள், விசேஷித்து நாராயணனையே குறிக்கும் என்பதும் வைதிகர்கள் சம்மதம்.
ஸ்ருஷ்டிக்கு ஸத் காரணமா அஸத் காரணமா என்கிற விசாரம் வந்தபோது , உபநிஷத்
ஸது ஏவ இதம் அக்ர ஆஷீத் => உள்ளது காரணம் என்றது.
அது ஆத்மாவா? அநாத்மாவா? அறிவுள்ளதா, அறிவற்றதா என்று கேட்க
ஆத்மாவா இதம் ஏகமேவ அக்ர ஆஷீத் => அறிவுள்ளது காரணம் என்றது.
அது பிரஹத்தா? அணுவா? என்ன
பிரஹ்ம வா இதம் ஏக அக்ர ஆஸீத் => பிரஹ்மமே ஜகத் காரணம் என்றது.
அந்த பிரஹ்மம் யார் என்பதை ஒருபடிச் சொல்லாமல்
இந்திரன் என்றும்
சிவன் என்றும்
ஹிரண்யகர்பன் என்றும்
நாராயணன் என்றும்
நாலு விதமாக பேசிற்று.
நால்வரில் ஒருத்தர்தான் பிரஹ்மம் என்பது சரி. மற்றய திருநாமங்களை அந்த பிரஹ்மத்தோடு ஸமன்வயப் படுத்த ஸாமான்யாதிகரண்யம் செய்ய வேண்டும். பொதுச்சொல் சிறப்புச் சொல்லில் பர்யவாசித்துதானிப்படுத்டுமாகி ல் அது சாமான்யாதிகரணம். உ.ம்.
மாணவர்கள் குழுமத்தில், ஒரு மாணாக்கணை தனித்து அழைக்க வேண்டுமாகில், மாணவன் என்ற சொல்லோடு, அந்த மாணாக்கனுக்கான சிறப்பு அம்சத்தை, எடுத்துக் காட்டாக மற்றவர்கள் கையில் இல்லாது, அவன் மட்டும் குடை பிடித்து இருந்தால், அந்த குடை பிடித்த மாணாக்கனைத் தருவியியுங்கோள் என்று சொல்லலாம். குடை பிடித்த என்ற சொல் மாணாக்கன் என்பதை விசேஷித்து, மற்றயோர்களைக் கழிக்கிறது.
அந்த கணக்கில், ஸது , ஆத்மா , பிரஹ்மம் என்பன பொதுச் சொல்லாய் நாராயணனைக் குறிக்கும். அதேபோல பிரம்மா, சிவன், இந்திரன் என்ற சொற்களும் பொதுச் சொல்லாய் நாராயணனையே குறிக்கும். நாராயண பரத்வத்தை ஆதரியாதவர்கள் இதே போல நாராயணி பொதுசொல்லாக்கி சிவன், இந்திரன், பிரமன் இவர்களை குறிக்கும் என்று வாதிட இயலாது. காரணம் :
யோகி அர்த்தம் - பாத சேர்க்கை யால் கிடைக்கும் பொருள்.
ரூடி அர்த்தம் - பொது வழக்கில் உள்ள அர்த்தம்.
உ.ம். பங்கஜம் = பங்க + ஜ = சேற்றில் பிறந்தது என்று பொருள் படும். காளானும் சேற்றில் பிறக்கிறது. ஆனால் பங்கஜம் என்பது தாமரையைக் குறிப்பதாக பிரசித்தம்.
பங்கஜம் என்ற சொல் தாமரையைக் குறிப்பதாக கொள்வது ரூட்டியர்த்தம் . ரூடியர்த்ததில் சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே உண்டு. பத சேர்க்கையைக் கொண்டு பொருள் கொள்வது யோகிகம். இதில் ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கலாம்.
த்விஜ என்பதற்கு - > யோகிக் அர்த்தம் => பிராம்மணன், பல், பறவை etc ரூடியர்த்தம் => பிராம்மணன் என்பது.
அது போல
பிரஹ்மம் என்பதற்கு ரூடியர்த்தம் => நாராயணன் என்பது.
யோகிகம் => சிவன் => மங்கலகாரகன் , சம்பு => சுகம் பவதீதி சம்பு , ஸ்தாணு => பிரதிஷ்டிதமாய் இருப்பவர், ருத்ரன் => ரோதயதீதி ருத்ர: ஆழப்பண்ணுமவன். அடியார்களை குண சேஷ்டிதங்களால் தழுதழுக்கச் செய்ப்பவன் என்ற இத்தனையும் நாராயணன் விஷயத்தில் யோகிக்க முறையில் பொருத்தி அர்த்தம் பண்ணலாம்.
அதுவே நாராயண சப்தத்தை மற்றவர்கள் பெயரில் ஏற்றமுடியாது. காரணம் சமஸ்கிருத வியாகரணம் இடம் கொடுக்காது.
பூர்வ பதாது ஸம்ஞாயாம் : அக: - பாணினி சூத்திரத்தின் படி
நார + அயந => நாராயண என்று மாறும். அது விசேஷித்து ஒருத்தரையே குறிக்கும்.
எப்படி சூர்ப்ப + நக என்பது சூர்ப்பணகை என்றாகி ராவண தங்கையை மட்டுமே குறிக்குமோ அதுபோல.
இந்த சூத்திரத்தின் படி நாராயண பதம் சிவன், சம்பு, ருத்ரன் இவர்களைச் சொல்லாது. ண-த்வம் பரம் பாததே என்று அப்பய்ய தீக்ஷிதர் வியசனம் .
அதிஷ்டான மனுப்பபத்தேஸ்ச => அதிஷ்டானம் பொருந்தாமையாலும் பாசுபத்தர்கள் மதம் நிரசனா யோக்கியம் .
ஸ்ருஷ்டி கர்த்தா சிவன் என்றால், நிமித்த காரணமான அவன் சரீரத்தோடே அதிஷ்டானம் பண்ணுகிறாரா? சரீரம் இல்லாமலா? என்ற கேள்விக்கு பதில் எப்படிச் சொன்னாலும் அது ஒவ்வாது. சைவர்கள் சம்பிரதாயத்தின் படி சிவன் - அ-சரீரி. ஸ்ருஷ்டிக்கோ சரீர அதிஷ்டானம் தேவை. சரீரத்தோடே என்றால், அதிஷ்டானம் நித்தியமாய், ஸ்ருஷ்டியும் இன்றளவும் நடந்து கொண்டே போரும். அவனை அதிஷ்டானம் செய்யத் தக்க படைப்பாளி ஒருவன் வேண்டும். அவரைப் படைத்தவர் யார்? , இன்னும் அவரைப் படைத்தவர் யார் என்று கேள்விக் கணைகள் பிரவாகமாக நீளும். எனவே அதிஷ்டானம் எக்காரணம் கொண்டும் இந்த சம்பிரதாயத்தின் படி பொருந்தாது.
ஆகையால், பாசுபதம் வேத சமஞ்சஸம் அல்ல.
சாங்கிய மத பிரவர்த்தகர் -> கபிலாசாரியர்.
யோக மதம் -> பிரவர்த்தகர் - பதஞ்சலி (எ ) ஹிரண்ய கற்பர்.
இருவர் மதத்திலும் பல ஒற்றுமை இருந்ததாலும் , ஈஸ்வர விஷயத்தில் ஒத்துப் போவதில்லை.
சாங்கிய மதம் ஸேஸ்வர சாங்கியம் என்றும் நிரீஸ்வர சாங்கியம் என்றும் இரண்டு பிரிவு. பிரம்மாவினால் கொடுக்கப் பட்ட யோகி மதம் ஈஸ்வரனை ஒப்புக் கொண்டாலும், அவன் சிருஷ்டிக்கு உபாதான காரணம் என்று ஒப்புக் கொள்ளாமல், நிமித்த காரணம் அளவாக சேஸ்வர சாங்கியனோடு ஒத்துப்போவர் .
தத்வங்கள் -> அசேதனம் 24 + சேதன தத்வம் ஜீவாத்மா 1 = ஆக மொத்தம் 25.
ஆத்மா -> உண்டு. அபிரஹ்மாத்மகம் ஆத்மா என்பது யோகி மதம். => ஆத்மாவுக்கு அந்தராத்மா ஈஸ்வரன் என்பது இல்லை .
வைதிக மதத்தின் படி அபிரஹ்மாத்மாக வாஸ்த்துவே கிடையாது.
ந இஹ நானா அஸ்தி -> இங்கே பல என்று கிடையாது. ஒன்றே உள்ளது என்று உபநிஷத் ஓதுகிறது . இதற்குப்பொருள் = . பிரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாத இரண்டாவது கிடையாது . இவ்வாறு பாற்காதவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான். ஸர்வத்ர பிரமாத்மஹமாக இருக்கிற ஒன்றே உண்டு என்று பாற்பவன் ஞானி என்பது இதன் பொருள்.
ஈஸ்வரன் -> நிரீஸ்வர சாங்கியத்தில் சாங்கியத்தில் இல்லை.. ஸேஸ்வர சாங்கியன் மற்றும் யோகி மதத்தில் உண்டு. ஆனாலும், ஈஸ்வரன் ஜகத்துக்கு உபாதான காரணம் என்பதில்லை. நிமித்த காரணம் மட்டுமே.
ஜகத் -> ஜகத் உபாதான காரணம் பிரதான் என்கிற மூலப் பிரகிருதி. ஈஸ்வரன் இல்லாமலே, பிரகிருதி ஸ்வதந்திரமாக தானே படைக்கும் என்கிற இவர்கள் பிரகிருதி காரண வாதிகள்.
நமக்கும் ஒருவகையில் ஜகத்துக்கு மூலப்பிரகிருதி தான் காரணம். ஆனால், பகவத் சரீரமான பிரகிருதி அ.து. ஈஸ்வர அதிஷ்டித பிரதானம் ஜகத் காரணம் என்பது வைதிக மதம்
பிரகிருதி -> கர்த்ருத்வம் உடையது. ஞானம் அற்றது.
புருஷன் (ஆத்மா) -> ஞாத்ருத்வம் உடையவன். பிரகிருதி கருவியாக செயல் படுமவன்.
இவைகளுக்குண்டான நெருக்கம் -> அத்தியாஸம் .
இந்த அநாதி ஸம்பந்தத்தின் விளைவு சம்ஸாரம் ->. ஸ்படிக + ஜபாகுஸுமம் போலே - நிறமற்ற ஸ்படிகத்தில் செம்பருத்தி நிறம் ஏறிடப் படுவது போலே, பிரகிருதியின் தன்மை ஆத்மாவிலும், புருஷனின் தன்மை பிரகிருதியிலும் இருப்பதாக அறிவது சம்ஸாரம்.
மோக்ஷம் -> ஆத்மா பேரிலான பிரகிருதி அத்யாஸம் நீங்குகை.
மோக்ஷ உபாயம் -> பிரகிருதி, புருஷ விவேக ஞானம் . அதனதன் தன்மையை மறாடி நினைக்காமல், பிரித்து அறிதல்.
நிரஸனம் :
ரசனாத் அநுப பத்தேஸ்ச :
பிரதானம் , பகவதிஷ்டானம் இல்லாமல், தானே ஜகத்தை படைக்கிறது என்பது பொருந்தாது. காரணம்
குயவன் என்கிற ஜீவாத்மா அதிஷ்டிக்காமல் மண் குடமாகாது.
நெசவாளி இல்லாமல், நூல் ஆடையாகாது.
பொற்கொல்லன் இல்லாமல் பொன் ஆபரணமாகாது.. அதனால்
பரமாத்ம அதிஷ்டானம் இல்லாமல் பிரதானம் படைக்கும் என்பது பொருந்தாது.
ந, அனுமானம்ஸ்ச
படைக்கப் பட்ட பொருள் அறிவுள்ள வஸ்து (ஆத்ம) அதிஷ்டானம் இல்லாமல் பிரவர்த்திக்கவும் மா ட்டாதே.
பால் தயிராவதும், தண்ணீர் இளநீர் ஆவதும் , அறிவுள்ள வஸ்துவின் அதிஷ்டானம் இல்லையாய்த்தானே ஏற்படுகிறது என்றால், அப்படி இல்லை.
இரும்பு கதவாக கொல்லன் வேண்டுவது போல , பால் தயிராகவும், தண்ணீர் இளநீர் ஆகவும் ஒரு ஆத்ம வாஸ்துவின் அதிஷ்டானம் உண்டு என்பதை அனுமானத்தால் உணரலாம்;
எல்லா பாலும், எல்லா தண்ணீரும், தயிராகவோ, இளநீராகவோ ஆகாத காரணத்தால்.
மாடு புல்லைத் தின்ன பாலாகிறதே , அதுபோல என்று பூ.ப.சொல்ல, அதுவும் தவறு.
காளை மாடு புல்லைத் தின்றால் பால் கிடைப்பதில்லையே, அதற்கு அதிஷ்டிக்கப் படாமை காரணம் ஆகிறது. எனவே புல் பாலாவதற்கு அறிவுள்ள பசு காரணம் .
மேலும் ஈஸ்வர அதிஷ்டானம் இல்லாமல், ஸ்வதந்த்ரமாக பிரதானம் தானே ஜகத்துக்கு காரணமானால், ஜகத்துக்கு பிரளயம் என்பதே ஏற்படாது. காரணம் பிரதானம் அசித்து.
ஸ்ருஷ்டி ஸ்திதி பிரளயம் மாறி மாறி ஏற்படுவதிலிருந்தே அது ஈஸ்வர சங்கல்பத்தாலே நடப்பதாகத் தேறுகிறது.
குதிருட்டிகள் :
பாட்ட பிரபாகரன் -> மீமாம்சகர்கள்.
ஆத்மா -> உண்டு. ஆத்மா நித்யம். அநேகம். விபு.
ஸம்ஸார -> ஹேது அநாதி கர்மம்.
ஈஸ்வரன் -> இல்லை .
ஜகத் -> பிரவாஹ ரூபேண நித்யம். ஜகத்து இப்படி, இப்படி என்று சொல்லுகிறோமே ஒழிய, அது இல்லாதபோது இப்படி இருக்கும் என்று யாரும் சொல்வதில். எனவே ஜகத் நித்யம். எனவே ஸ்ருதி கர்த்தா என்கிற ஈஸ்வர ஸத்பாவத்துக்கு இடம் இல்லை.
காமம் -> உண்டு . ஈஸ்வர ஸத்பாவம் இல்லாததால் , கர்மங்களுக்கு பயனளிப்பது , வேதோக்த கர்மங்களை அனுஷ்டிப்பதால் பிறக்கும் அபூர்வம் என்பதால். அது இரண்டு விதம்.
நித்யாபூர்வம்-> பாலாபிஸந்தி ரஹித கார்மோபாசன மடியாக உண்டாவது.
அநித்யாபூர்வம் -> பல உத்திஸ்ய கார்மோபாசன மடியாக உண்டாவது.
மோக்ஷம் -> ஆத்ம பிராப்தி.
ஹேது -> யக்ஞாதி கர்மங்களால் பிறந்த நித்ய அபூர்வம்.
மாயாவதி :
பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர:
சங்கரர் -> பரம் பிரஹ்மைவ அக்ஞம் (அவித்யா சபளித பிரஹ்மம்) ; பிரம பரிகதம் (ஜகத், ஆத்மா பல என்று பேதலிக்கிறது) ; ஸம்ஸரதி (அதுவே சம்ஸாரத்துக்கு காரணம்). - (வேதார்த்த சங்கிரகம்.)
பிரஹ்மம் - அநிர்வசனீயம் . ஞானமே ஆத்மா. ஞான குணகன் அன்று.
நிர்விசேஷம் => விசேஷங்கள் வியாவர்த்தகமாய் பிரஹ்மம் வேறுபாடு அற்றது .
ஸ்வ ஜாதீய பேதம் -> ஆலமரம், புளிய மரத்துக்கான வேறுபாடு..
விஜாதீய பேதம் -> மரமும் , மலையுக்குமான வேறுபாடு..
ஸ்வகத பேதம் -> ஒரே மரத்தில், பூ, இலை, கிளை என்கிற வேறுபாடு.
அதுபோல
ஆத்மா - பரமாத்மா இரண்டும் ஒரே ஜாதி, ஞானத்தைப் பார்க்க - ஸஜாதீய பேதம்..
பரமாத்மா, அசித்து இரண்டும் வேறு ஜாதி அஜடம், ஜடம் என்று பார்க்கும் போது - விஜாதீய பேதம்.
பரமாத்மாவினுடைய திவ்யாத்மா ஸ்வரூபம், திய்வ மங்கள விக்ரகம், திருக் கல்யாண குணங்கள் இவை அனைத்தும் - ஸ்வகத பேதம்.
இப்படியான மூன்று வித வேறு பாடும் அற்றது பிஹ்மம் என்பது சங்கரர் பக்ஷம். காரணம்
பிரஹ்மத்தைத் தவிர்ந்த வேறு ஒரு ஆத்மா கிடையாது. எனவே ஸஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மம் ஒன்றே உண்டு. அசித்து கிடையாது. எனவே விஜாதீய பேதம் இல்லை.
பிரஹ்மத்துக்கு சரீரமோ, குணங்களோ கிடையாது. ஆகவே ஸ்வகத பேதமும் கிடையாது.
இப்படிச் சொன்னால், முயல் கொம்பு போலே , பிரஹ்ம துச்சம் - இல்லாத ஒன்று ஆகிவிடாதோ?
என்ன - பதில் :
சின்மாத்ரம் -> ஸ்வயம் பிரகாச சைதன்யம் மாத்ரம் பிரஹ்மம். தர்மா-தர்மி விபாகம் இல்லை.
அவித்யை -> மாயா சபளித பிரஹ்மம் -> ஜகத் உண்டு என்றும், ஆத்மாக்கள் பல என்றும் பிரமிக்கிறது. உ.ம்.
நிலவு - அதன் ஒளி - குளம், கண்ணடி, பளபளக்கும் கத்தி இவைகளில் பட்டு பலவாக தோற்றுவது போல ஏற்படுவது பேத ஞானம்.
ஜகத்து பொய்யானது ஆகையால், அவித்யை ஸ்தானத்தில் இருக்கிற குளம், கண்ணாடி, கத்தி இவையோடு அந்த அவித்யையும் பொய் என்பது சங்கரர் வாதம்.
அக்ஞானத்தை போக்க வேண்டிய பிரஹ்மத்துக்கே அவித்தை என்றால், போக்குமவர் யார் என்று கேட்டால்
இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிப்பது, போலே பொய்யான ஜகத்தை உண்மை என்றும், ஒன்றேயான ஆத்மாவை பலவென்றும் விபிரதிபத்தி பண்ணுகை அக்ஞானம். அவித்தை.
இருட்டு -> உபாதி.
அஹம் பிரஹ்மாஸ்மி;
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
தத்வமஸி ஸ்வேதகேதோ!
ஸது ஏவ ஸௌம்ய! இதம் அக்ர ஆஸீத் ; ஏக மேவ அதுவிதீயம்
இத்யாதி வாக்கியார்த்த ஜன்ய ஐக்கிய ஞானத்தாலே , அவித்யை யாகிற இருட்டு போய், பாம்பல்ல பழுது என்கிற தெளிவு பிறத்தல் போல், பிரஹ்ம சத்யம். ஜகந் மித்யா . ஜீவோந் ந பர: என்று ஏற்படுகிற ஞான தசையே மோக்ஷம். இதுவே ஜீவன் முக்தி.
உ.ம். கோயில் அர்ச்சகர், கோயில் கதவை பூட்டி, சாவியை தோளில் சாத்தி புஜிக்கச் சென்று பூஜித்த பின்பு சாவியை எங்கு வைத்தோம் என்று தேடபி புகுந்தால், அப்போது வேறொருவர் அவர் தோளிலேயே இருப்பதாக உணர்த்தினால், சாவிக் கொத்து அங்கு புதிதாக வந்ததோ? இல்லையே.
எனவே தியான, ஆசன, உபாஸனாத்தி கர்மாக்களோ, பக்தி ரூபாபன்ன ஞானமும் ஏதுக்கு?
வாக்கியஜன்ய வாக்கியார்த்த ஞா னமே போதுமானது. நாயம் ஸர்ப்ப இதி ஞான மாத்ர நிவர்த்த இதி தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்யப் பந்தா அயனாய வித்யதே - என்பவை காண்க.என்பது இவருடைய மதம். .
தத்வம் -> ஆத்மா ஒன்றே. அதுவே நிர்விசேஷ பிரஹ்மம் .
ஈஸ்வரன் -> உண்டு. அதுவே பிரஹ்மம். சகுண பிரஹ்மம் அல்ல. நிர்குணம்.
ஜகத்து -> மித்யா- கானல் நீர் போல பொய் தோற்றமானது. இந்த ஜகத்துக்கு பரமாணு காரணமில்லை. பிரதானம் காரண மில்லை. ஆத்மா காரண மில்லை. பிரஹ்மத்துடைய அவித்தையே காரணம்.
கர்மங்கள் -> உண்டு.
சம்ஸாரம் -> பிரஹ்மத்தினுடைய அக்ஞானத்தால் ஏற்படுகிற பேத ஞானம் .
மோக்ஷம் -> பிரஹ்ம ஐக்கியம்
சாதனம் -> தத்துவார்த்த வாக்யார்த்த ஞானம்.ஒன்றே போதுமானது.
நிரஸனம் :
தத்வமஸி ஸ்வேதகேதோ!
என்பதற்கு சங்கரர் காட்டியது :
தது -> அந்த பிரஹ்மமே
துவம் -> நீ
அஸி -> ஆகிறாய்.
என்பதான ஸ்வரூப ஐக்கிய அத்வைதம்
ஆனால்
மட்குடம் என்று ஜகல் லக்ஷணையாகச் சொன்னாலும், அது மண் + ஆன + குடம் என்பதாக விசிஷ்டத்தையைத் தருவித்துக் கொள்ள வேண்டும். மிருக் பிண்ட மாக இருந்த மண் வாயும் வயிறுமான விசேஷணங்களோடு கூடிய பானை ஆயிற்று என்பதே ஸதர்த்தம் .
தத்வமஸி வார்த்தைக்கு முன்னால் சொல்லப்பட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா!
என்பதிலுள்ள காரண-கார்ய, சரீர-ஆத்ம பாவத்தை தத்வமஸி வார்த்தையோடு சேர்த்துப் படிக் க மறந்தார் சங்கரர்..
விட்டிலக்கணை -> விசேஷங்களை விட்டுச் சொல்வது ஜகல் லக்ஷனை என்றும் அழைக்கப் படும்.
விடா இலக்கணை -> அடைமொழிகளை சேர்த்துச் சொல்வது.
விட்டுவிடா இலக்கணை -> சிலவற்றைச் சொல்லி, மற்றவைகளை விரிவுக்கு அஞ்சி விடுகை.- என்கிற மூன்றில்
விட்டிலக்கணை விதியை அனுசரித்து , விடுபட்ட
ஐததாத்மியம் இதம் ஸர்வம் ; தத் ஸத்யம் ; ஸ ஆத்மா! என்பதிலான
காரண-கார்ய, சரீர-ஆத்ம விசேஷணங்களைத் தருவித்துக் கொண்டால்
தது -> அந்த (காரண) பிரஹ்மம்
துவம் -> (அந்தராத்மாவாகக் கொண்ட ) நீ
அஸி -> ஆகிறாய்
என்கிற விளக்கம் விசிஷ்டாத்வைத பரமான வைதிக மதம்.
சங்கரர் மாயா என்பதற்கு பொய் என்று பொருள் கூறினார்.
மாயாந்து பிரகிருதிம் வித்தியாத் மாயியந்து மஹேஸ்வரம் என்பதற்கு ஏற்ப, மாயா என்றால் ஆச்சர்யம் என்பது பகவத் ராமானுஜர் விளக்கம். பகவத் திரோதான கரீம் என்று உள்ளிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை பிராகிருதமான சரீரம் மறைப்பதால் அதுவே ஆச்சர்யம்.
ஸோஹம் - ஸஹ : ஹம்
சங்கர மதத்தில் உபாதி பொய். பொய்யான உபாதி உண்மையான பிரஹ்மத்தை மறைக்கமுடியுமா ? அப்படியே மறைத்தாலும், பொய்யான ஒன்றை போக்குவது என்பது எங்கனே?
உபாதி போகவில்லை யானால் சம்ஸாரம் விலகாதே?. சம்ஸாரம் விலகாத போது அபேத க்ஞானமும் ஏற்பட வழியில்லையாய் மோக்ஷமும் சித்திக்காது - என்கிற பெரிய வியசனம் வரும் .
இதிலிருந்து வெளிவர,
பாஸ்கரர் :
தத் ப்ரோபாத் தியாலீடம் விவசம் -> பிரஹ்மம் உபாதிக்கு உட்பட்டு கர்மவஸ்யராய் ஜீவ பாவம் அநுபவதி .
அவித்தை சத்யம் என்று ஒத்துக் கொண்டு, அபேத ஞான உபாஸனத்தாலே அந்த அவித்தை விலக ஐக்கியம் பிறக்கும். அதுவே மோக்ஷம் என்றான் . ஆக, இவர் மதத்தில் உண்மையான அவித்யையால், ஆத்மாக்கள் பல என்கிற அபேதம் தோற்றுகிறது .
உபாதிகளான புத்தி, இந்திரியம், சரீரம். இதில் பிரஹ்மம் பட்டு பலவாகப் பிரமிக்கிறது, எப்படி ஒரே நிலவு, தண்ணீர், கண்ணாடி, கத்திகளில் பட்டு பல பிம்பங்கள் தோற்றுகின்றனவோ அதுபோல என்றான்.
உபாதி நசிவதும் அபேத ஞான உபாசனத்தாலே.
சரீரம் - கடம்
ஈஸ்வரன் - கடாகாசம்.
கடம் - உபாதி தொலைந்தால்
பிரஹ்மம் - மஹாகாசத்தோடு ஏகீ பாவம்.
தத்வம் -> பிரஹ்மம், உபாதி என்று இரண்டைச் சொன்னாலும், ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா -> உண்டு. பிரஹ்மதுக்கு ஜீவா பாவம்
ஈஸ்வரன் -> சகுண ஈஸ்வரன்.
ஜகத் -> சத்யம். பிரஹ்ம கர்ம உபாதி தசையில்.
கர்மம் -> உண்டு
சம்ஸாரம் -> உபாதி தசையில் சுக துக்கானுபவம்
மோக்ஷம் - ஐக்கியம்.
உபாயம் -> வர்ணாஸ்ரம தர்மங்களை அனுஷ்டித்து அபேத ஞான வாச்சயமான உபாசனம். சங்கர பக்ஷத்தில் உபாதி பொய் என்பதால் பிரம பர்கர ஞானம் மட்டும் போதும் உபாதி கழிய. பாஸ்கரீயத்தில் உபாதி சத்யமாதலால், ஞானத்தோடு உபாசனமும் சொல்லப்பட்டது.
யாதவபிரகாசர் :
அஸுபஸ்ச ஆஸ்பதம் -> ஜீவன், அசித்து இரண்டுக்கும் பிரஹ்மம் ஆஸ்பதமாக இருக்கிறது - என்பது இவருடைய பக்ஷம்.
இவருடைய மதத்தில் , பிரஹ்மமே சிதசித் ஈஸ்வரர் என பரிணமிக்கிறது. பிரஹ்மமும், சிதசித் ஈஸ்வரர்களும் ஒன்றுதான், ஆனால் இரண்டும் வேறு என்பதான பிரமம் பிரம்மத்துக்கு இருப்பது விலகி இரண்டும் ஒன்றே என்று உணரும்போது மோக்ஷம் என்கிறார்.
வித்யாம் ச அவித்யாம் ச யத்யத் வேத உபயகும் ஸக
அவித்தையா மிருத்யும் தீர்த்வா வித்யயா அமிருதம் அஸ்நுதே
வித்யா -> ஞானம் .
அவித்யா -> ஞான பின்னம் -> கர்மம்.
அநிஷ்டம் -> சம்ஸாரம் . அதன் நிவிருத்தி கர்ம யோகத்தாலே.
மோக்ஷம் -> பிரஹ்ம ஏகீ பாவம் - அது ஞான யோகத்தாலே .
சங்கரர் சொன்ன ஞானமும் ; பாஸ்கரன் சொன்ன உபாசனம் இரண்டும் சேர
கர்ம- ஞான சமுச்சயத்தாலே - உபாய-உபேய துவயத்தாலே - மோக்ஷம் என்றார் இவர்..
வைதிக மதத்திலும் கர்ம-ஞானங்கள் மோக்ஷ ஸாதனம். ஆனால் ஒரு வேறுபாடு. கர்மக்ஞானங்கள் பக்திக்கு அங்கமாகக் கொண்டு பக்தி ரூபாபன்ன ஞானத்தாலே மோக்ஷம் என்பது ராமானுஜ பக்ஷம்.
சம்ஸாரம் -> ஸ்வஸ்மாத் அபின்னமான சிதசித் ஈஸ்வரர்களை வேறுபட்டதாக பிரமிக்கை
பேதாபேத வாதம் :
அசித்துக்கும் பிரஹ்மத்துக்கும் பேதம் , அபேதம் இரண்டும் ஸ்வாபாவிகம் .
சித்திக்கும், பிரஹ்மத்துக்கும் அபேதம் ஸ்வாபாவிகம். பேதம் ஒளபாதிகம் -> இது பாஸ்கர பக்ஷம்.
அசித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாப்பாவிகம் போலே ,
சித்துக்கும் , பிரஹ்மத்துக்கும் பேதாபேதம் ஸ்வாபாவிகம் -> இது யாதவபிரகாச பக்ஷம்.
தத்வம் -> சிதசித் ஈஸ்வரன் என்ற மூன்றைச் சொன்னாலும் , ஏகீ பாவத்தில் ஒன்று தான்.
ஆத்மா -> உண்டு. பிரஹ்மமே விகாரமடைந்து ஆத்மாவாக பிரமிக்கிறது.
ஈஸ்வரன் -> உண்டு. அதுவும் ஸகுண ஈஸ்வரன்.
ஜகத் -> ஸத்யம் . உபாதியும் உண்மை.
கர்மங்கள் -> உண்டு.- சுக துக்கானுபவம் .
சம்ஸாரம் -> பேத ஞானம் சம்ஸாரம்
மோக்ஷம் -> ஐக்கியம்.
சாதனம் -> கர்ம க்ஞான ஸமுச்சயம் .
ஏகாயனர் :
ஏகம் பிராப்பியம் .
ஹரிப் பரதர :
ஸத்யம் ஜகத்
தத்துவதோ கிண்ணா: ஜீவ கணா :
ஹரேர் அநுசரா :
நீசோச்ச பாவம் கதா:
முக்திஹி நைதி சஸுகாதி அநகா :
பக்திஸ்ச தத் ஸாதனம் .
ஈஸ்வர ஸத்பாவம் ஆத்மாவுக்கு சொல்லப் படவில்லை. அதாவது, ஆத்மா ஸ்வதந்திரன் .
ஆத்ம-பரமாத்மா சம்பந்தம் சரீராத்மகமானது என்பதை ஏற்கவில்லை.
ஸர்வதா ஸ்வதந்திரன் ஆத்மா -> துவைதம்.
ஸ்வரூபேண ஒன்று -> அத்வைதம்.
தத்துவங்கள் வேறானாலும், சாமான்யாதிகரண்ய சரீராத்மா நிபத்தனமாக ஒன்று என்னல் -> விசிஷ்டாத்துவைதம்.
நாராயணனை மட்டும் அயனமாக உடைய மாத்வர்கள் ஏகாயனர்கள்.
இருவருக்குமான சேர்த்தியிலே கைங்கர்யம் - சேஷ விருத்தி நம்முடையது.
நாராயணன் ஒருவனுக்காய் சேஷ விருத்தி அவர்களுடையது.
அபூர்ண (கதித ) ஸக்தி விசிஷ்ட பிரஹ்மம் அவர்களுடையது. பிராட்டி விசிஷ்ட பிரஹ்மம் என்பதால் பூர்ண ஸக்தி விசிஷ்டன் ஸ்ரீமன் நாராயணனாகிற பிரஹ்மம் என்பது நம்முடைய பக்ஷம்.
தத்வம் -> சிதசித் ஈஸ்வரன் என்கிற 3.
ஆத்மா -> ஸர்வதா ஸ்வதந்திரன் . ஆனாலும், எப்போதும் ஹரியை அனுசரித்தே செல்பவன்.
ஈஸ்வரன் -> லக்ஷ்மி சக்தி தவிர்ந்த சீமித சக்தியுக்தன்.
ஜகத் -> உண்டு. அது பிரஹ்ம காரியம்.
கர்மங்கள் -> உண்டு.
சம்ஸாரம் -> கர்மங்களே காரணம்.
மோக்ஷம் -> வைகுந்தப் பிராப்தி.
உபாயம் -> பக்தி உபாசனம்.
இப்படியாக, பாஹ்ய குத்திருட்டி மாதங்கள் 17ம் பரிதியாஜ்யம்.
--Compiled from the Discourse of Sri U. Ve. Velukkudi Krishnan Swamy by
Dasarathy Dasan
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.
Comments
Post a Comment